படகு விபத்தில் ஒருவர் மீட்பு மற்றுமொருவர் மாயம்

படகு விபத்தில் ஒருவர் மீட்பு மற்றுமொருவர் மாயம்-Fishing Boat Accident Crash on Rock-One Rescued One Missing

படகு  கற்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீனவரொருவர் காணாமல் போன நிலையில் மற்றுமொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை - மனையாவெளி பகுதியைச்சேர்ந்த  பைத்துல்லா என்றழைக்கப்படும் 49 வயதான அப்துல் ம‌ஜீத் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இவருடன் சென்ற அதே இடத்தைச் சேர்ந்த ருக்மால் எனும் 39 வயதான  மற்றுமொரு மீனவர் கடலில்  காணாமல் போயுள்ளதாகவும் இவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இன்று (08) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் மனையாவெளி பகுதியிலிருந்து படகு ஒன்றில் இருவரும் மீன்பிடிக்கச் சென்ற போது, அவர்கள் சென்ற படகு கற்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் கடற்படையினர் மீனவரை மீட்டு   வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும்  மற்றைய மீனவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Sun, 12/08/2019 - 21:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை