யொக்ஸ்போர் மணிப்பூர் பிரிவில் தீ: இரு வீடுகள் சேதம்

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட யொக்ஸ்போர் மணிப்பூர் பிரிவில் 7 வீடுகளை கொண்ட 8ம் இலக்க குடியிருப்பில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

இன்று (08) காலை 9.15 அளவில் இடம்பெற்ற இத்தீவிபத்தில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு மற்றொரு வீட்டிலும் தீ பரவியுள்ளது.

இருப்பினும் இரண்டாவது வீடும் முற்றாக தீக்கிரையாகும் முன்னர் ஊர்மக்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த தீ விபத்தானது மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக ஊர்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்  

Sun, 12/08/2019 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை