'எல்லையில்லா ஆறு' இசைத்தட்டு வெளியீடு

இசைக்கவி விமலின் இசையமைப்பில் முழங்காவில் அன்புபுரத்தை சேர்ந்த இளம் கவிஞர் யுசிந்தனின் 'எல்லையில்லா ஆறு' இசைத்தட்டு வெளியீடு நேற்று முன்தினம் முழங்காவில் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டு வைத்தார்.

பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள், இசையமைப்பாளர்கள், இசை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பரந்தன் குறூப் நிருபர்

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை