ஜப்பான் அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

வடக்கின் குடிநீர்ப் பிரச்சினை

வடமாகாணத்தில் நன்னீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியை கடற்றொழில் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தொஸிமித்சூமோட்டிஜிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் சந்திப்பு (13) நடைபெற்றது.

இதன்போது, வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் அமைச்சரினால் மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்ற  அமைச்சர், கடற்றொழிலை இலங்கையில் மேலும் வளப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வகையான பங்களிப்புகளையும் ஜப்பான் அரசாங்கம் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அத்தோடு, கடற்றொழிலில் ஈடுபடுவோர் அனர்த்தங்களை எதிர்கொள்கின்ற போது, அவர்களை தேடிக்கண்டு பிடிப்பதற்கும் பாதுகாப்பாக மீட்பதற்கும் தேவையான நவீன பொறிமுறையை உருவாக்குவதற்கு தொழில் நுட்ப மற்றும் படகு வசதிகளை ஜப்பான் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வடக்கின் குடிநீர்ப் பிர்ச்சினை தொடர்பான கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், அனர்த்தங்களின் போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பாக ஏற்கனவே ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை