சிட்னி, செளத் வேல்ஸில் சுகாதார அவசர நிலை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காற்றுத் தூய்மைக்கேடு மிக மோசமான அளவை எட்டியுள்ளது.

அதனையடுத்து சிட்னியிலும், நியூ செளத் வேல்ஸிலும் பொதுச் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் சில இடங்களில் அபாய அளவை விட 11 மடங்கு அதிகம் பதிவானது.

சுவாசக் கோளாற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 வீதம் அதிகரித்ததாக, நியூ செளத் வேல்ஸ் மாநிலச் சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்த வாரம் கடுமையான அனல் காற்றால் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை