இ.போ.ச. - லொறி விபத்தில் மூவர் பலி; இருவர் காயம்

இன்று காலை எம்பிலிப்பிட்டி - இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்

சங்கபால பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலன்னாவவிலிருந்து கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் ஒன்று எம்பிலிப்பிட்டிய நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

லொறியில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, அதில் பயணித்த இருவரே காயமடைந்து இவ்வாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பதலங்கல - குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

காயமடைந்த இருவரும் தற்போது எம்பிலிப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Fri, 12/27/2019 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை