முன்பிணை கோரி ராஜித மனுத் தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு எதிராக முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக இவர் ஜனாதிபதி தேர்தலின் போது ஊடக மாநாடொன்றை நடத்தியிருந்தார். இதில் கலந்துகொண்ட இரு நபர்களும் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வெள்ளை வேனில் கடத்தல்கள் நடந்ததாக கூயிருந்தனர். இந்நிலையில் புதிய அரசாங்கம் நடத்திய விசாரணைகளின் பின்னர் வெள்ளை வேன் விவகாரம் பற்றி பேசிய இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித அழுத்தம் கொடுத்ததாலே இவ்வாறு பொய் கூறியதாக இரு சந்தேகநபர்களும் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு ஆளும் தரப்பினரும் சிவில் அமைப்பினரும் கோரி வருகின்றனர். இந்த நிலையிலே அவர் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை