பின்லாந்தில் இளவயது பெண் பிரதமராகப் பதவியேற்பு

பின்லாந்தில் 34 வயதுடைய இளம் பெண் பிரதமராகியுள்ளார்.இநாட்டில் கடந்த ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. இதில் பிரதான கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்தத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது.இவருக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டதால் அண்டி ரின்னே கடந்த 3 ஆம் தேதி பதவி விலகினார்.இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்ற 34 வயதுடைய சன்னாமரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போக்குவரத்துத்துறை அமைச்சராக செயற்பட்ட 34 வயதான சன்னா மரின், பின்லாந்தின் பிரதமராக பதிவேற்றதன் மூலம் உலகில் ஆட்சியில் இருக்கும் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சன்னா மரின் தனது 27 வது வயதில் அவரது சொந்த ஊரான டம்பியரில் நகர சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு பின்லாந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

 

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை