மரை இறைச்சியுடன் இருவர் கைது

திருகோணமலை ஜயந்திபுர காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 25 கிலோ மரை இறைச்சியைக் கொண்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்தனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்தனர்.

ஜயந்திபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜயந்திபுர பகுதியிருந்து கந்தளாய் பகுதிக்கு காட்டு வழியாக சென்ற போதே இவர்கள் 25 கிலோ மரை இறைச்சியுடன் கைதாகினர். சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இவர்களை ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(கந்தளாய் தினகரன் நிருபர்)

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை