எங்கள் ஜனாதிபதி புரட்சியாளனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சிறந்தொரு நிர்வாகி என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
புரட்சியாளனை விட சிறந்த நிர்வாகியே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார். யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாசவுக்கு இருந்த மாபெரும் அலையையும் மீறி யாழில் கோட்டாபயவிற்கு விழுந்த 23,000 வாக்குகள் 250, 000 இலட்சம் வாக்குகளுக்கு சமன். நாட்டில் எந்த ஜனாதிபதியும் செய்யாத
மாற்றங்கள் இப்போது நடைபெறுகின்றன. இதனால் மக்கள் மத்தியிலும் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புரட்சியாளனை விட சிறந்த நிர்வாகியாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
யாழ்.விசேட நிருபர்
from tkn