பாதிக்கப்பட்ட மக்களுக்கு துலாஞ்சலி பிரேமதாசவினால் உலர் உணவு கையளிப்பு

காத்தான்குடியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றுமுன்தினம் (07) துலாஞ்சலி பிரேமதாச உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் 16ம் வட்டாரத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மஞ்சந்தெடுவாய் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களூக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.ஐ. முஸ்தபா உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

புதிய காத்தான்குடி தினகரன், ஆரையம்பதி தினகரன் நிருபர்கள்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை