ஐ.தே.க. மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் நிருவாக மறுசீரமைப்பு தொடர்பில் சிபாரிசுகளை வழங்கும் பொருட்டு ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக ஹரீன் பெர்னாண்டோ கூறுகையில்,

கட்சி நிருவாக மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்ந்து அவசியமான சிபாரிசுகளை தயாரித்து அந்த சிபாரிசுகளை கட்சியின் செயற்குழுவுக்குச் சமர்பித்து அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் விரைவில் கூடவிருக்கும் விசேட மாநாட்டுக்குச் சமர்பிக்கப்படும்.   நேற்று முன்தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக மாத்திரமே பேசி முடிவு எட்டப்பட்டது.  கட்சி நிருவாக மறுசீரமைப்பு தொடர்பாக செயற்குழுக் கூட்டத்திலேயே தீர்மாணிக்கப்பட வேண்டும் என்றார்.

எம்.ஏ.எம்.நிலாம்

Sat, 12/07/2019 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை