அட்டாளைச்சேனை மத்திய நிருபர்
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.த உயர்தரம் -2008 வகுப்பில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள 'சாதனாவெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி' எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் 11,12,13ம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அணிக்கு 8 பேர், மட்டுப்படுத்தப்பட்ட ஐந்து ஓவர்கள் பந்து வீச்சினைக் கொண்ட இச்சுற்றுப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் ஏ.சி.முஸாதீக், எஸ்.எம்.ஜெஸீல் ஆகியோர் அண்மையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் ஏ.எல்.கமர்டீனை பாடசாலையில் சந்தித்து, இதற்கான கடிதத்தைக் கையளித்தனர்.
வெற்றிபெறும் அணிகள் மற்றும் வெற்றி வீரர்கள் பதக்கம், வெற்றிக் கிண்ணம்என்பன வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்களது அணி பற்றிய விபரத்தை உள்ளடக்கிய விண்ணப்பப் படிவத்தினை டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
from tkn