3 மில்லியன் ரூபா செலவில் வீதி புனரமைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வேம்பொடுகேணி கிராம அலுவலர் பிரிவில் உள்ள குருடிகாடு இணைப்பு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட கால யுத்தத்தில் முகமாலை முன்னரங்க பகுதிகளாக காணப்பட்ட குறித்த பிரதேசத்தில் வீதிகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டதுடன் மழை காலங்களில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிராம மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளருடைய கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில் வீதியினை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சமூக பாதுகாப்பு நிதியின் மூலம் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை தவிசாளர் முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் 3 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை