ஹொன்டுராஸ் சிறையில் கலவரம்: 18 கைதிகள் பலி

ஹொன்டுராஸின் வடக்கு துறைமுக நகரான டேலாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 18 கைதிகள் கொல்லப்பட்டு மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

கைதிகள் துப்பாக்கிகளை வைத்திருப்பதால் அதிகாரிகள் பாதுகாப்புடனேயே சிறைக்குள் நுழைந்ததாக அந்த சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புப் படையினர் கைதிகளிடம் இருந்து ஐந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஹொன்டுராசின் அதிக நெரிசல் கொண்ட சிறைகளில் அடிக்கடி கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. ஹொன்டுராஸ் சிறைச்சாலைகளில் 20,000க்கும் அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் அங்கு சுமார் 8,000 கைதிகளுக்கே இட வசதி உள்ளது.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை