மேலதிக நேரக் கொடுப்பனவாக ஒரு மாதத்தில் 15 கோடி ரூபா

பெற். கூட்டுத்தாபன முறைகேடு;

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு கடந்த மாதம் மாத்திரம் மேலதிக நேரக்கொடுப்பனவாக 15 கோடி ரூபா வழங்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மேலதிக ஊழியர்கள் அதிகளவில் உள்ள நிலையில் எவ்வாறு மாதத்திற்கு 15 கோடி ரூபா மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர் இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூட்டுத்தாபன  பொது முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.

முறையற்ற முகாமைத்துவம் காரணமாக அரசுக்கு பெறுமளவு நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் இதன் உண்மைத் தன்மையை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை