சீன சுரங்க விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு சீனாவில் செயல்பட்டு வந்த நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். தென்மேற்கு சீனாவில் உள்ள குய்செள மாகாணத்தில் நடந்த இந்த விபத்தில் மேலும் இருவர் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்கனவே பலமுறை இதேபோன்று வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர் தொடக்கம் சீனாவில் ஏற்பட்ட சுரங்க விபத்துகளில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை