நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் சிந்துபால்சாக் பகுதியில் உள்ள அரணிகோ மலைப்பகுதி வீதியில் யாத்திரிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள், 18 பேர் காயமடைந்தனர்.

டோலகா மாவட்டம் காளின்சோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு ஒரு பஸ்ஸில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தபூர் நகருக்கு கடந்த சனிக்கிழமை இரவு திரும்பினர். சிந்துபால்சாக் பகுதியில் அரணிகோ வீதியில் பஸ் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 மீற்றர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. விபத்து நடந்த இடம் தலைநகர் கத்மண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்று பொலிஸார் கத்மண்ட் போஸ்ட் செய்திக்குப் பேட்டி அளித்துள்ளார்கள்.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை