பிலிப்பைன்ஸில் மது அருந்திய 11 பேர் பலி

பிலிப்பைன்ஸில் தேங்காய்ச் சாறு மூலம் உள்ளூரில் தயாரிக்கப்படும் மது பானத்தை அருந்திய பதினொரு பேர் உயிரிழந்திருப்பதோடு 300க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டபோதும் அவர்கள் அனைவரும் ஒரே கடையிலேயே மதுபானத்தை வாங்கி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் சிகிச்சைக்கு முன்னர் வயிற்றுவலி மற்றும் தலைசுற்றலினால் பதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக ஆளுநர் ரமில் ஹர்னன்டஸ் குறிப்பிட்டார். எனினும் லம்பனொக் என்று அழைக்கப்படும் இந்த மதுபானத்தினால் உயிரிழப்புகள் பதிவானது இது முதல் முறையல்ல. இதனை அருந்தியதால் கடந்த ஆண்டில் குறைந்தது 21 பேர் உயிரிந்தனர்.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை