பாராளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்கள் இலக்கு வைப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உண்மையிலேயே பின்னடைவு கண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தலின்போது பெளத்த, இளைஞர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் வாக்குகள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கவில்லையென்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் மன்றத்தினரை சிறிகொத்தவில் நேற்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் பிரதமர் இங்கு மேலும் கூறியதாவது:

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 113 ஆசனங்களை இலக்கு வைத்து போட்டியிட வேண்டும். இதற்கு ஏற்றாற்போல இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பெளத்த மதகுருமாரை சந்தித்து ஐ.தே.கவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் நாம் விரைவில் கலந்துரையாடவுள்ளோம் என்றும் அவர் கூறினார். இச்சந்திப்பின்போது இளைஞர் மன்றத்தை சேர்ந்தோரும் தமது பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர்.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை