ஆப்கான் குண்டு வெடிப்பு: உறவினர்கள் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இறுதிச் சடங்கொன்றில் பங்கேற்க சென்றுகொண்டிருந்த கார் வண்டி ஒன்று வீதி குண்டு ஒன்றில் சிக்கியதில் ஒரே குடும்பத்தின் பத்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வோகன் ரக வாகனத்தில் கோஸ்ட் மாகாணத்தில் இருந்து நேற்று பயணித்துக் கொண்டிருந்தபோதே இவர்கள் இந்த குண்டுவெடிப்புக்கு இலக்காகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

“கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தின் ஐந்து ஆண்கள், இரு பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்குகின்றனர்” என்று கோஸ்ட் ஆளுநர் சார்பில் பேசவல்ல தாலிப் மங்கல் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

“இறுதிச் சடங்கொன்றில் பங்கேற்பதற்காக அவர்கள் லோகர் மாகாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீதியோர குண்டை தலிபான்கள் வைத்திருப்பதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஸ்ரத் ரஹிமி குற்றம்சாட்டினார்.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை