பங்களாதேஷ் தொழிற்சாலை தீ விபத்தினால் 10 பேர் பலி

பங்களாதேஷில் காற்றாடித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டாக்காவில் அந்தத் தொழிற்சாலை அமைந்துள்ளதாகவும், இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்டபோது எத்தனை பேர் தொழிற்சாலைக்குள் இருந்தனர் என்பது தெரியவில்லை என்றும், தீ எதனால் மூண்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கடந்த வாரமும் இதே போன்ற தீ விபத்து பங்களாதேஷில் நடந்தது. அதில் 19 பேர் மாண்டனர்.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை