ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி அச்சுறுத்திய நபர் ஜனவரி 09 வரை சிறையில்

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீயானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற அந்நபர் 11/9, புனித செபஸ்டியன் மாவத்தை, மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்தவராவார்.

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இந்த நபர் மொரட்டுவை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 09ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தெரிவித்துள்ளார்.  

Sun, 12/29/2019 - 15:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை