சுதத் சில்வாவுக்கு சார்க் விருது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஐந்து ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ புகைப்படப் பிடிப்பாளராக நீண்டகாலமாக சேவையாற்றிவரும் ஜனாதிபதியின் புகைப்பட பிரிவின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகபூர்வ புகைப்படப் பிடிப்பாளரான சுதத் சில்வா, 2019ஆம் ஆண்டின் தெற்காசிய பங்குடமை மாநாட்டின் வர்த்தக சிறப்பு விருது விழாவில் சார்க் நாடுகளின் சிறந்த அரசியல் புகைப்படப் பிடிப்பாளராக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவின்போது ஜனாதிபதியிடமிருந்து அவர் அவ்விருதை பெற்றுக்கொண்டார்.

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tarik Ahsan மற்றும் சார்க் நாடுகளின் சிரேஷ்ட தலைவர்களும் இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை