பஸ் தரிப்பிட நிலையத்துக்கு முன்பாக சேகரிக்கப்படும் குப்பைகளால் மக்கள் அவதி

கினிகத்தேனை நகரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிட நிலையத்துக்கு முன்பாக குப்பைகள் சேகரிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இவ்வாறு குப்பைகளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக குப்பைகள் சேகரிக்கப்படுவதால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பகமுவ பிரதேச சபையால் நகரங்களை அழகுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறு அழகுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கும் போது குப்பைகளால் நகரத்தை அழகில்லாமல் ஆக்குவது முறையானதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

தொடர்ச்சியாக குப்பைகளை புதிய பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக சேகரித்து வைக்கப்படுவது நகரத்தினுடைய அழகுக்கும் மக்களின் சுகாதரத்திற்கும் கேடு விளைவிக்கும் செயலாகும். எனவே மேற்படி விடயங்களை கருத்திற்கொண்டு அம்பகமுவ பிரதேச சபை இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படல் வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

 

கினிகத்தேனை தினகரன் நிருபர்

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை