ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு புதுடில்லியில் மகத்தான வரவேற்பு

இலங்கையிலிருந்து புறப்பட்ட போது...

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (28) பிற்பகல் புது டில்லியை சென்றடைந்தார்.

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரை இந்திய அரச போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி வி.கே.சிங் வரவேற்றார். இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்டோர் இங்கு வருகை தந்திருந்தனர்.

வரவேற்பு நிகழ்வு பல்வேறு கலாசார அம்சங்களுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர்.

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை