பொலிவிய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரும் இணைந்தனர்

பொலிவிய ஜனாதிபதி எவோ மொராலஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஒரு சில நகரங்களில் பொலிஸார் இணைந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்காவில் நீண்ட காலத் தலைவராக இருக்கும் மொராலஸ் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் தனது நான்காவது தவணைக்கு வெற்றிபெற்றபோதும் அவர் மோசடியில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை அரசுக்குச் சொந்தமான இரு ஊடகங்களை முடக்கினர்.

எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துவரும் மொராலஸ் பதவி விலகப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று பொலிவிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் மக்களுக்கு எதிராக செயற்படப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கும் பொலிவிய பாதுகாப்ப படையினர், ஜனநாயக வழியில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நான்கு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் பதற்றம் காரணமாக இதுவரை மூவர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

எனினும் பிரதான போட்டியாளரான கார்லொஸ் மேசா பேச்சுவார்த்தையை நிராகரித்து வருவதோடு மொராலஸ் பதவி விலகி, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை