ஆர்ப்பாட்டக்காரர் மீது சூடு: ஐவர் உயிரிழப்பு

ஈராக்கில் ஆர்ப்பாட்டக்கார்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை, ஊழல் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 1ஆம் திகதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மட்டும் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தியதில் 4 பேர் காயங்களுடன் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை