844 அரச நிறுவனங்கள்
844 அரசாங்க நிறுவனங்களின் கடந்த ஆண்டு நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான அரசாங்கக் கணக்குக் குழுவின் அறிக்கை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது முன்வைப்பதாக குழுவின் தலைவர் அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இந்த அறிக்கைக்கான அனுமதியை அரசாங்கக் கணக்குக் குழு அண்மையில் வழங்கியது. அனைத்து அரசாங்க நிறுவனங்களினதும் நிதி மற்றும்
செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கக் கணக்குக் குழு, அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை பரிசீலனை செய்வதற்கு மேலதிகமாக 2015 நிதியாண்டு முதல் அனைத்து அரசாங்க நிறுவனங்களினதும் நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கணினி தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வருடாந்த மதிப்பீடு நடவடிக்கையை ஆரம்பித்ததுடன் அதனடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட 26 பரிசீலனை அறிக்கைகளை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படும் என்றார்.
from tkn