இலங்கையின் புதிய ஜனாதிபதி மற்றும் இராணுவம் பற்றிய பொய்யான தகவல்களை தெரிவித்தமைக்காக பி.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பலர் நேற்று பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையின் மதிப்புக்கு பங்கம் விளைவிக்கும் மேற்படி அறிக்கையை பி.பி.சி. தொலைக்காட்சியில் இருந்து அகற்றுமாறு கூறும் மகஜர் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரிடம் கையளித்தனர்.
இந் நிலையில் பி.பி.சி.யின் மேற்படி அறிக்கை தன்னை சங்கடத்துக்குள்ளாக்கியதாக அருட் தந்தை சிஸ்டஸ் குருகுலசூரிய கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
இந்த விடயம் என்னை சங்கடத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அது எமது நாட்டுக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது. ஜனாதிபதியாக நாம் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்துள்ளோம். அவரைப் பற்றிய பொய்யான விடயங்களை நாம் கேட்டிருக்கிறோம்.
இத்தனைக்கும் மத்தியிலியே நாம் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளோம். இலங்கை மக்களின் விருப்பத்தை சர்வதேச சமூகங்கள் மதிக்க வேண்டும். இலங்கையர்கள் என்ற ரீதியில் எமக்கு ஒற்றுமையும் அமைதியும் தேவையாகும்.
மேற்படி அறிக்கை வெறுப்பை உமிழ்வதாக உள்ளது. வெறுப்பின் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என்றார்.
from tkn