தேர்தல் இறுதிக்கட்ட விடயங்களை ஆராயும் உயர்மட்ட மாநாடு இன்று

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று உயர்மட்ட மாநாடொன்றை நடத்துகிறார்.    இம்மாநாடு இராஜாகிரியவிலுள்ள மத்திய வங்கி செயலகத்தின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர், உதவி தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தலோடு தொடர்புபட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது, தேர்தல் நாளான்று கையாளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் உட்பட பல்வேறு பட்ட விடயங்களும் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படவிருப்பதாக தேர்தல் செயலகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.   

எம்.ஏ.எம். நிலாம்  

Sat, 11/09/2019 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை