இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டி

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சதுரங்க சம்பியன்சிப் போட்டிகள் அண்மையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரும் அம்பாறை மாவட்ட சதுரங்க விளையாட்டுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஏ.எம்.ஸாகிர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிகள் அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சுவிஸ் முறையிலான 5 சுற்றுக்களைக் கொண்ட தொடராக இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக இடம்பெற்றது .

7, 9, 11, 13, 15, 17 வயதிற்குட்ட ஆண், பெண் இருபாலாருக்குமிடையில் இடம்பெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி , வெண்கலப்பதக்கங்களும் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இடம்பெறவுள்ள சதுரங்க போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெய்னாகாடு விசேட நிருபர்

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை