தேசியமட்ட போட்டிக்கு தெரிவு

ஓட்டமாவடி தாறுல் உலூம் வித்தியாலய மாணவர்கள் இருவர் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் மொஹமட் பைசல் தெரிவித்தார்.

சிறுவர் கெகுழு ஆரம்ப பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அமீஸ்தீன் அம்சாட் என்ற மாணவரும் ஆரம்பப் பிரிவு கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற கடாபி பாத்திமா சஹ்னி என்ற மாணவியுமே இவ்வாறு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களாவர்.

இந்த மாணவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு அதிபர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

 

(வாழைச்சேனை விசேட நிருபர்)

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை