ஆலம்குளம் அஷ்ரப் பாலர் பாடசாலையின் விடுகை விழா

அட்டாளைச்சேனை ஆலம்குளம் அஷ்ரப் ஞாபகார்த்த பாலர் பாடசாலையின் மலர் வெளியீடும், விடுகை விழாவும் ஆசிரியை ஏ.சீ.சஸ்னா தலைமையில் பாலர் பாடசாலை

வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலய அதிபர்

எம்.ஏ.சீ.எம்.உபைத்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.ஐ.சம்சுத்தீன், அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ. உயர்பீட உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

பாலர் பாடசாலையில் பாடவிதானத்தில் திறமை காட்டிய மாணவர்களுக்கு இதன்போது அதிதிகளினால் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாலர் பாடசாலையின் பல்வேறு தகவல்கள் அடங்கிய 2019ம் ஆண்டுக்கான மலரும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை