இலங்கை அணியினருக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை இலங்கை அணி இழந்த நிலையில், தற்காலிக பயிற்சியாளரான ருமேஷ் ரத்நாயக்க இலங்கை இன்னும் சரியாக தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3–0 என்று முழுமையாக தோற்றது.

இது குறித்து இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளரான ருமேஷ் ரத்நாயக்க கூறுகையில், இலங்கை அணி நல்ல சாவலை கொடுத்தது என்று நம்புகிறேன்.

இதிலிருந்து பல பாடங்களை இலங்கை அணி கற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கவில்லை.

இதை நான் அணியின் தோல்விக்கான காரணமாக குறிப்பிடவில்லை. அவுஸ்திரேலிய மண்ணுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் ஒன்றுக்கு வரும் போது பாடமாக இருக்கும்.

இது போன்ற ஆடுகளங்கள் தயாரித்து, இலங்கையில் விளையாட வேண்டும். இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கு சரியாக தயாராக வேண்டும்.

இல்லையெனில் இதே நிலை தான் அன்று நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை