அ.சேனை மீலாத் நகர் வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீலாத்நகர் பிரதான வீதியை புனரமைத்து உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அட்டாளைச்சேனை மீலாத்நகர் வீதியின் ஒரு பகுதி காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டும் மற்றுமொரு பகுதி போக்குவரத்துக்குப் பொருத்தமற்றதாகப் பழுதடைந்து காட்சியளிக்கின்றது.

இவ்வீதி பொதுமக்களினதும் விவசாயிகளினதும் பிரதான போக்குவரத்துப் பாதையாகவும் விளங்கி வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெற்காணிக் கண்டங்களுக்கு போக்குவரத்துச் செய்யும் பிரதான பாதையாக இவ்வீதி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையும்; ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களும் இவ்வீதியில் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனையில் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதியின் தற்போதைய நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. மீலாத்நகர் பிரதேசத்தை அண்மித்த பகுதி மிக மோசமாகப் பழுதடைந்த நிலையில், குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது. நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கும் இவ்வீதியை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை