ஆயுர்வேத கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட தருமபுரம் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ஆயுர்வேத வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட நாதன்திட்டம், புன்னை, நீராவி, பிரமந்தனாறு, கல்லாறு தருமபுரம், கட்டைக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கான இலவச ஆயுர்வேத வைத்தியசேவையை வழங்கும் வகையில் ஆயுர்வேத வைத்தியசாலையினை அமைத்துதருமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலை அமைப்பதற்கான காணியினை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் த.குருகுலராஜா வழங்கிய நிலையில் மேற்படி வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று முன்தினம் நாட்டி வைக்கப்பட்டது.

பரந்தன் குறூப் நிருபர்

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை