சட்டமன்ற உறுப்பினர் காதை கடித்துத் துப்பிய எதிர்ப்பாளர்

ஹொங்கொங் ஆர்ப்பாட்டம்:

ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கத்தியால் ஒருவர் குத்தியதன் விளைவாக ஐவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

ஹொங்கொங்கின் டாய் கூ வட்டாரத்தில் உள்ள கடைத்தொகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் நான்கு ஆடவரும் பெண் ஒருவரும் காயமடைந்தனர்.

அவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவத் தரப்பினர் கூறியுள்ளனர்.

தாக்கப்பட்டவர்களில் ஒருவர் ஹொங்கொங்கின் உள்ளுர் சட்ட மன்ற உறுப்பினர் ஆண்டிரு சியு காயின் என்று தெரிவிக்கப்பட்டது.

கடைத்தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அரசியல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சீன மொழி பேசிய ஆடவர் கத்தியால் தாக்க ஆரம்பித்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். கத்தியால் தாக்கிய ஆடவர் கடைத்தொகுதியிலிருந்து தப்பித்து செல்வதைத் தடுக்க முற்பட்டபோது, சியுவின் காதை அந்த ஆடவர் கடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை கடைத்தொகுதியில் இருந்த பொதுமக்கள் ஆடவரைப் பிடித்து வைத்தனர். அவர் பொலிஸ் விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார்.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை