அமெரிக்காவில் மலைப்பாம்பு கழுத்தை இறுக்கி பெண் பலி

அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இண்டியானா பகுதியைச் சேர்ந்த லாரா ஹர்ஸ்ட் என்ற இளம்பெண் தனது வீட்டில் 140க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். மேலும் தனது செல்லப்பிள்ளைபோல மஞ்சள் நிற மலைப்பாம்புகளையும் லாரா வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவரின் வீடு பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கழுத்தில் சுற்றிய நிலையில் லாரா இறந்து கிடந்தார்.

போதையில் மயங்கி விழுந்த நிலையில் அவர் கீழே விழுந்த பின் பாம்பு கழுத்தை இறுக்கியிருக்கலாம் என்று கூறிய பொலிஸார், லாராவின் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை