கொங்கோவில் பயணிகள் விமானம் வீட்டில் விழுந்து பலரும் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு நகரான கோமாவில் 18 பேருடன் வந்த விமானம் ஒன்று வீடொன்றின் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் நேர்ந்ததாக மாகாண ஆளுநர் குறிப்பிட்டபோதும் அது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை. கோமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட இந்த விமானம் சற்று நேரத்தில் காணாமல்போன நிலையிலேயே அது வீடொன்றின் மீது விழுந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்நட்டின் பிசி பீ என்ற விமானச் சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விமான சேவையிடம் 228 விமானங்கள் உள்ளன.

எனினும் பொதிய பாதுகாப்பு இன்மை மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக கொங்கோவில் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. பிசி பீ உட்பட கொங்கோ நாட்டின் அனைத்து வர்த்தக விமான சேவைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் புறப்பட்ட அதே விமான நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் புறப்பட்ட விமானம் ஒன்று புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை