வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரமாண்ட கூட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதுடன், வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக (8) கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், வடக்கு, கிழக்கின் 8மாவட்டங்களிலும் ஒவ்வொரு பிரமாண்ட பிரசாரக் கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தவுள்ளதுடன், வட்டார அடிப்படையில் கூட்டங்களையும் நடத்தவுள்ளது.
அதற்கு அப்பால் வீடு வீடாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கோரும் பிரசார நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது. இதேவேளை, சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறுவது குறித்து இதுவரை எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. என்றாலும், அவருக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளதால் சிலவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறுக்கூடுமென்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn