திருமலையில் இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வு

திருகோணமலை மாவட்டத்திலுள்ள எழுத்தாணி கலைப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஊடகவியல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்றுமுன்தினம் (24) நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வணக்கத்துக்குரிய மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேலும், சிறப்பு விருந்தினராக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கோணேஸ்வரனும் கலந்து சிறப்பித்தார்கள்.

இச் செயலமர்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட ரீதியாக உள்ள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இடங்களில் இருந்து அதிகமான இளைஞர் யுவதிகளும், ஊடகப்பிரிவு கற்கை நெறியை கற்கும் மாணவர்களும், பல்கலைக்கழக மாணவியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை