பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்

சக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்தது.

தேசிய கிரிக்கெட் லீக் போட்டி பங்களாதேஷில் நடந்து வருகிறது. இதில் டாக்கா மண்டலம்-குல்னா மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் குல்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் பங்களாதேஷ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன், சக வீரர் அராபத் சன்னியை கோபத்தில் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். தனது பந்து வீச்சு திறமை குறித்து அராபத் சன்னி குறை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து புகார் வந்ததும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஷகாதத் ஹூசைனை உடனடியாக இடைநீக்கம் செய்தது. அவர் வீடு திரும்பினார்.

ஷகாதத் ஹூசைனுக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 33 வயதான ஷகாதத் ஹூசைன் பங்களாதேஷ் அணிக்காக 38 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

Wed, 11/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை