அட்டாளைச்சேனையில் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்காக நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பு நேற்றுமுன்தினம் (24) பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பாலத்தடி முகத்திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எம்.ஐ.எம்.மன்சூர்,கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஆரிப் சம்சுத்தின், ஐ.எல்.எம்.மாஹிர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ,கட்சி போராளிகள், ஆதரவாளர்கள், இளைஞர்கள் உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை