மீலாத் தேசிய மட்ட போட்டிகளில் ஜெயிலானிக்கு இரண்டு இடங்கள்

மீலாத் தேசிய மட்ட போட்டிகளில் ஜெயிலானிக்கு இரண்டு இடங்கள்-National Milad Un Nabi Competition-Jailani National School

தேசிய மட்ட மீலாத் போட்டிகளில் பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை முதலாம் இடமொன்றையும் இரண்டாமிடமொன்றையும் பெற்றுக் கொண்டுள்ளது.

கனிஷ்ட பிரிவு சிங்களப் பேச்சு போட்டியில் மொஹமட் றிஸ்வி பாத்திமா றிஸ்னியா அகில இலங்கை ரீதியாக 01 ஆம் இடத்தையும் பாடசாலையின் சிரேஷ்ட பிரிவு கதம்ப போட்டி அணி 2 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதம்ப போட்டி நிகழ்ச்சியொன்றில் ஜெயிலானி தேசிய பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மட்டத்திலான வெற்றியொன்று பெறப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம். றிஷாத் நன்றி தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)

Sun, 11/03/2019 - 09:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை