அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் அப்துல்லாஹ்வுக்கு பாராட்டு

கல்வி அமைச்சு, கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்திய, அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில், அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் என்.அப்துல்லாஹ், 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடாத்திய, மாகாண மட்டப் போட்டியிலும் மாணவன் அப்துல்லாஹ் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி இரண்டாமிடம் பெற்றமை

குறிப்பிடத்தக்கது. வெற்றி மாணவன் அப்துல்லாஹ், பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.ஏ.எம்.றஸ்பாஸ் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் ஏ.எல்.கமர்டீன் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து, பாராட்டுத் தெரிவித்துக் கொண்டனர். தரம் 6 மற்றும் 7 பிரிவுகளுக்கான வலயத் தலைவர், ஆசிரியர் ஜே.பாஹிர்.

ஆசிரியர்கள் ஏ.எல்.சபாத் அஹமட். ஐ.எம்.பர்ஸான், ஏ.ஏ.பாத்திமா நாதியா

ஆகியோர் மாணவர்கள் சகிதம் வெற்றி மாணவனுக்கு மாலை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தனர். மாணவன் அப்துல்லாஹ், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜே.நிலூபர், ஆசிரியை றஹீமா தம்பதியினரின் புதல்வராவார்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை