“இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்” புகைப்பட கண்காட்சி நேற்று ஆரம்பம்

இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் என்ற தொனிப்பொருளிலான புகைப்படக் கண்காட்சியை நேற்று 26 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து ஆரம்பித்து வைத்தார்.

ஒரு வருட நீட்சியுடனான இந்த கொண்டாட்டத்தை இந்திய அரசியலமைப்பின் 70ஆவது ஆண்டு

நிறைவுடன் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த துணைத் தூதுவர் விநோத் கே.ஜேக்கப், இந்திய அரசியலமைப்பு தினத்தின் (26 நவம்பர்) முக்கியத்துவம் குறித்து இங்கு சுட்டிக் காட்டியிருந்ததுடன் இந்திய ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை முதல் அதனை அங்கீகரித்தமை வரையிலும் விளக்கமளித்திருந்தார்.

இந்த புகைப்படக் கண்காட்சியில் அரசியலமைப்பு உருவாக்கம், அரசியலமைப்புச் சபையின் முதலாவது அமர்வு மற்றும் இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி என அழைக்கப்படுபவரும் சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உள்ளடங்கலாக அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரிதான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு 07, ஆர்.ஜி.சேனாநாயக்கா மாவத்தை இலக்கம் 16/2 இல் அமைந்திருக்கும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த கண்காட்சி நேற்று 26 ஆரம்பமானது.

இக்கண்காட்சி நாளை 28 ஆம் திகதி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

 

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை