இரணைமடு குளத்து நீர் திறப்பு

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான காலபோக பயிர்ச் செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. குளத்தின் வலது கரை, இடது கரை துருசுகள் இரண்டும் நீர் விநியோகத்திற்காக திறக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட விவசாயக் குழுத் தீர்மானத்திற்கமைவாகவும் மழையின்மையினால் களைநாசினி பாவிக்கப்பட்ட வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டிய நிலையிலும் நேற்று முன்தினம் குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெரிய நீர்ப்பாசன குளங்களின் நீர் மட்டம் பத்தடியினை தாண்டும் நிலையில் குளத்தின் நீர் திறந்து விடப்படும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இரணைமடுக் குளத்தின் நீர் காலபோக பயிர்ச் செய்கைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை