சிறை கழிப்பறையில் துளையிட்டு தப்பிய கொலைக் குற்றவாளிகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிறையில் இருந்து கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அவர்கள் இருவரும் கழிப்பறைக் கூரையில் 22 அங்குல அளவுள்ள ஓட்டை போட்டுத் தப்பினர்.

சாண்டோஸ் என்னும் 21 வயது ஆடவரும், ஜொனத்தன் என்னும் 20 வயது ஆடவரும் கழிப்பறை ஒன்றில் துளையிட்டு சிறையில் இருந்து ஊர்ந்து வெளியேறினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதிகள் கெமராவுக்குப் புலப்படாத இடத்தைத் தெரிந்துகொண்டு அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். பொலிஸ் அதிகாரிகள் தப்பிச் சென்ற கைதிகளின் படங்களை வெளியிட்டுள்ளனர். கைதிகள் பற்றித் தகவல் கொடுப்போருக்கு 5,000 டொலர் பரிசு வழங்கப்படுமென அதிகாரிகள் கூறினர்.

இரண்டு கைதிகளும் வெவ்வேறு கொலைக் குற்றங்கள் தொடர்பில் சிறையிடப்பட்டிருந்தனர். கைதிகளைக் பொலிஸார் தேடிவருகின்றனர்.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை