ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாளஅட்டைகளை உதவி தேர்தல் ஆணையாளர்கள் நேற்று வழங்கினர்.
அந்தந்த மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் தற்காலிக அடையாள அட்டைகளை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
பிரதேச செயலாளர்கள் வாக்காளர்கள் வதியும் கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்தனர்.
பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் சுமார் 750 பேருக்கு இத்தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இது அவசர அரச பணியாதலால் பொத்துவில் பிரதேச செயலாளர்
ஆர்.திரவியராஜ் அவற்றை கிராமசேவையாளரின் அலுவலகங்களுக்குச்சென்று வழங்கினார்.
கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் உதவி த் தேர்தல் ஆணையாளரின் ஒப்பத்துடன் கூடிய வாக்காளரின்படத்துடன் அடையாள அட்டைகளைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தமை தெரிந்ததே.
காரைதீவு குறூப் நிருபர்
from tkn